கன்கொன் || Kangon
இத்தளத்தில் பிரயோசமான எதுவும் இருக்காது...
Monday, January 16, 2012
இந்திய அணி: ஏன் எதற்கு எவ்வாறு? இனி என்ன?
உலகில் அதிகம் பேரால் எதிர்பார்க்கப்படும் அல்லது இரசிக்கப்படும் இரண்டு அணிகள் அண்மைக்காலமாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றன.
இந்தியா என்ற மாபெரும் சனத்தொகை கொண்ட நாட்டின் அணி, உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்ட அணி, சிறிது காலத்திற்கு முன்னர் வரை ரெஸ்ற் தரப்படுத்தலில் முதல்நிலையை வகித்த அணி, சச்சின் ரென்டுல்கர் -
ராகுல் ட்ராவிட்- வி.வி.எஸ்.லக்ஸ்மன் - விரேந்தர் செவாக் போன்ற மாபெரும் நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு அணி தொடர்ச்சியாக இரண்டாவது தொடரில் மாபெரும் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
மறுபுறத்தில் தோற்கும் போது போராடித் தோற்கும் அணி, தங்களுக்கென்று தனிப்பாணியான கிறிக்கற்றைக் கொண்ட ஒரு அணி என்று வர்ணிக்கப்படுகின்ற ஒரு அணி படுதோல்விகளைச் சந்தித்து வருகிறது.
இவ்வணிகள் இவ்வளவிற்கு மோசமானவையா என்ற கேள்வி எழுவது சாதாணரமானது, அதேபோல, இவ்விரு அணிகளையும் வெற்றிகொள்கின்ற எதிரணிகள் இரண்டும் தொடர் முடிவுகள் காட்டுகின்ற அளவுக்கு மிகச்சிறந்த அணிகளா என்ற கேள்வியும் எழுவதைத் தவிர்க்க முடியாது.
இலங்கை அணியின் ரெஸ்ற் தொடர் நிறைவடைந்து சிறிது காலம் ஆகிவிட்ட நிலையில் இலங்கை அணியைப் பற்றி இரண்டாவதாகப் பார்ப்பதும், தற்போது சூடான பேசுபொருளாக இருக்கின்ற இந்திய அணியின் திறமை வெளிப்பாடுகள் தொடர்பாக முதலில் பார்ப்பதும் சிறப்பானது.
அவுஸ்ரேலியாவுக்கு இந்திய அணி கிறிக்கற் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது உண்மையில் எந்த அணி வெற்றிபெறும் என்று உறுதியாகக் கூறமுடியாத நிலை காணப்பட்டது.
இந்திய அணி ஒருபுறத்தில் பலமற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக மேற்கிந்தியத் தீவுகளில் வைத்து எதிர்பார்த்தளவு சிறப்பாகச் செயற்பட்டிருக்காத அதேவேளை, இங்கிலாந்தில் வைத்து படுமோசமாகச் செயற்பட்டிருந்தது.
பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு வருகை தந்தபோது 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்த போதும், அத்தொடரிலும் இந்திய அணியின் துடுப்பாட்டம் முதலாவது
போட்டியின் முதல் இனிங்ஸ் மற்றும் நான்காவது போட்டியின் இரண்டாவது இனிங்ஸ் ஆகியவற்றில் தடுமாறியிருந்ததுடன், பந்துவீச்சும் 2 இனிங்ஸ்களில் மோசமானதாக அமைந்திருந்தது.
மறுபுறத்தில் அவுஸ்ரேலிய அணி தென்னாபிரிக்காவில் வைத்து முதற்போட்டியை மோசமாகச் செயற்பட்டு தோற்ற பின்னர் இரண்டாவது போட்டியை இறுதிநேரத்தில் வைத்து வெற்றிகொண்டதோடு ஒப்பீட்டளவில் பலவீனமாக நியூசிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து 1-1 என்ற கணக்கில் தொடரைச் சமநிலையில் முடித்துக்கொண்டிருந்தது.
ஆகவே இரண்டு அணிகளையும் பொறுத்தவரை தங்களை நிரூபித்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. சில வீரர்களின் ரெஸ்ற் எதிர்காலங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிந்தது.
தேவையானால் இரண்டு புதிய பயிற்றுவிப்பாளர்களும் தங்களை நிரூபித்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக இத்தொடர் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. வெளியிலிருந்து பார்க்கும் போது இரண்டு அணிகளும் ஓரளவு சமபலமானவை, வேண்டுமானால் இந்திய அணியின் துடுப்பாட்டம் மிகச்சிறப்பானதாகக் காணப்பட்ட அதேவேளை, அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு அண்மைக்காலமாக தங்களை நிரூபித்து வந்திருந்தது. இரண்டு அணிகளுக்கும் இத்தொடருக்கு முன்னதாக பலவீனங்கள் என ஏராளமானவை காணப்பட்டன. வி.வி.எஸ் லக்ஸ்மன் இங்கிலாந்தில் தடுமாறிய விதம், சச்சினின் நூறாவது சதம் தொடர்பான அழுத்தம், டோணியின் வெளிநாட்டு மண் சறுக்கல்கள், வேகப்பந்து வீச்சாளர்களின் உடற்தகுதிகள் என இந்தியாவின் பிரச்சினைகள் என்றால், றிக்கி பொன்டிங், மைக்கல் ஹசி ஆகியோரின் ஃபோர்ம், சுழற்பந்து வீச்சாளர் எப்படிச் செயற்படுவார், புதிய ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி, காயத்தின் பின் மீண்டுவரும் ஷோன் மார்ஷ் என அவுஸ்ரேலியப் பக்கம் பிரச்சினைகள்.
ஆகுவே இத்தொடரின் முடிவு என்பது அணிகள் தங்களது பலவீனங்களை வெளிப்படுத்தாமல் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என்பது தெளிவானதாகக் காணப்பட்டது.
ஆனால் 3 போட்டிகளின் முடிவில் 3--0 என்ற அவுஸ்ரேலியா தொடரைக் கைப்பற்றுமென்றோ, 3 போட்டிகளில் இரண்டு இனிங்ஸ் தோல்விகள் கிடைக்குமென்றோ, இன்னுமொரு பத்து விக்கெட் தோல்வி கிடைக்குமென்றோ யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. திடீரென மூன்று போட்டிகள் நிறைவில் உலகின் தலைசிறந்த இரண்டு துடுப்பாட்ட வீரர்களின் எதிர்காலங்கள் நிச்சயமற்றுப் போயிருக்கின்றன, 9 மாதங்களுக்கு முன்னர் இந்தியாவின் தலைசிறந்த குடிமகன்களில் ஒருவராக, இதுவரை இந்தியாவைத் தலைமை தாங்கிய அணித்தலைவர்களில் மிகச்சிறந்தவர் என வர்ணிக்கப்பட்ட ஒருவர் அணித்தலைமையில் இருக்கக்கூடாது என இந்திய ஊடகங்கள் வலியுறுத்துமளவிற்கு நிலை கட்டுமீறிச் சென்றிருக்கிறது.
உலகத்தின் மிகப்பெரிய பொருளாதாரப் பலம் வாய்ந்த கிறிக்கற் சபை, சர்வதேசக் கிறிக்கற் சபையினை ஆட்டிப்படைக்கும் கிறிக்கற் சபை என இந்தியா மீது குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டபோதெல்லாம் இந்திய அணியின் திறமை வெளிப்பாடுகள் அவற்றை மறைக்குமளவிற்று அல்லது அவற்றின் வலுவைக் குறைக்குமளவிற்கு இருந்தன.
ஆனால் எப்போதெல்லாம் இந்திய அணி தோற்கும் போதும் அவை சம்பந்தமான விமர்சனங்கள் வந்து சேர்வது வழக்கமானது.
ஆனால் இம்முறை முதன்முறையாக (இங்கிலாந்துத் தொடரின் பின்பு எழுப்பப்பட்டிருந்தாலும், இப்போது தான் வலுவாக எழுந்திருக்கிறது) இந்திய அணியின் மீது, இந்தியாவின் கிறிக்கற் கட்டமைப்புகள் மீது கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
இந்திய அணி உட்பட உப கண்ட அணிகள் மீது முன்பு எழுப்பப்படும் தட்டையான ஆடுகளங்களில் சோபிக்கும் புலிகள் என்ற பட்டம் சூட்டப்பட்டிருக்கிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இரட்டைச்சதம் பெற்று கதாநாயகன் ஆகியிருந்த விரேந்தர் செவாக் மீது விமர்சனங்கள், அழுத்தங்கள். இந்தியாவுக்கு உலகக்கிண்ணத்தை வென்றுகொடுத்த கௌதம் கம்பீரின் (டோணியின் அதிரடி 90 ஓட்டங்களை விட, கௌதம் கம்பீரின் 97 ஓட்டங்களை நான் மிகவும் மதிக்கிறேன். போட்டியை இந்தியாவின் பக்கமாகத் திருப்பியது கௌதம் கம்பீரே என நான் எண்ணுகிறேன்) இடம் அணியில் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களின் மோசமான துடுப்பாட்டம் இத்தொடர் தோல்விக்கான முக்கியமான காரணம் என நான் எண்ணுகிறேன்.
அத்தோடு இந்திய அணி மீது ஏதா ஒரு அழுத்தம் காணப்படுவது போல உணர்வதைத் தவிர்க்க முடியாது. இங்கிலாந்துத் தொடரில் அவர்கள் களைப்படைந்திருந்தார்கள் என்றால் இத்தொடரில் அவ்வாறு இருக்க வாய்ப்புக்கள் இல்லை.
சச்சினின் சதம் மீதான அழுத்தம் காரணமாக இருக்குமா என்று கேட்டால் அவ்வழுத்தம் இந்தளவில் காணப்படுமா எனக் கேட்காமல் இருக்க முடியவில்லை. சச்சின் முன்பை விட மிகச்சிறப்பாக ஆடுகிறார். 50 ஓட்டங்களைப் பெறும் வரை சச்சினை ஆட்டமிழக்கச் செய்ய முடியாது போல் இருக்கிறது. ஆனால் அதன் பின்னர் எவ்வாறோ ஆட்டமிழக்க வழிகளைக் கண்டுபிடித்து விடுகிறார்.
வி.வி.எஸ்.லக்ஸ்மனின் காலம் முடிவடைந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். அல்லது அவர் ஓய்வென்றைப் பெற்று தன்னை நிரூபித்து மீண்டும் அணிக்குள் இடம்பெற வேண்டிய தேவை இருக்கிறது.
கடந்த ஆஷஷ் தொடரின் முடிவில் அவுஸ்ரேலியா கற்றிச்சைக் கழற்றி விட்டது, சிடில், ஹில்பன்ஹோஸ் ஆகியோரை தங்களது இடத்துக்காக போராட விட்டது எனச் செய்த சில நடவடிக்கைகள் அவர்களுக்கு சிறப்பாக உதவியிருக்கின்றன. றிக்கி பொன்டிங் இற்கு தொடர்ந்து வாய்ப்புக்களை வழங்கினார்கள். தேவையான நேரத்தில் தன்னை நிரூபித்திருந்தார் பொன்டிங். அதேபோல ஆஷஷ் தொடரின் பின்னர் அணிக்குள் பற்றின்சன், கமின்ஸ், ஸ்ரார்க், ஷோன் மார்ஷ், டேவிட் வோணர், எட் கோவன் உட்பட ஏராளமானோருக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன, சிரேஷ்ட வீரர்களுக்கு தேவையான அழுத்தங்களை வழங்கி அணியைக் கட்டமைக்கும் பொறுப்பை அவுஸ்ரேலியா சிறப்பாகச் செயற்பட்டிருந்தது.
கற்றிச்சிற்கு ஒப்பந்தம் மறுக்கப்பட்டபோது அதற்கு எதிராகக் கதைத்தவன் என்ற போதிலும், கற்றிச் இற்குப் பதிலாக அணிக்குள் கொண்டுவரப்பட்டிருந்த பிலிப் ஹியூஸைக் கழற்றி விட்டு எட் கோவன் மற்றும் டேவிட் வோணர் இருவரும் நம்பிக்கை தருகிறார்கள்.
ஒரு மோசமா ஆஷஷ் தொடரின் பின்னர் தங்களை திருத்திக் கொள்ள அவுஸ்ரேலியா எடுத்துக் கொண்ட ஆர்கஸ் மீள்பரிசீலனைகள் அவுஸ்ரேலியாவை நிச்சயமாக வளப்படுத்தியிருக்கின்றன, இங்கிலாந்துத் தொடரின் பின்னர் இவ்வாறான ஒன்றை இந்தியா செய்திருக்க வேண்டும், ஆனால் இவ் அவுஸ்ரேலியத் தொடருக்குப் பின்னராவது தங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்கு உண்டு.
இத்தொடரின் நடுவே இந்தியாவுக்கு பெரியளவிலான மாற்றங்களை மேற்கொள்ள முடியாத நிலையும் இந்தியாவுக்கு உண்டு.
வேண்டுமானால் அஷ்வின் சிறப்பாகச் செயற்படவில்லை என்பதற்காக வினய் குமாருக்கு வழங்கியதை விட பிரக்ஜான் ஒஜாவிற்கு வாய்ப்பை வழங்கியிருக்கலாம். அண்மைக்காலமாக தன்னை ஒஜா மிகச்சிறப்பா நிரூபித்து வருகிறார்.
பேர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதமானது என்பதால், அவுஸ்ரேலியா நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதால் "கானமயிலாட கண்டிருந்த வான்கோழி" கதையாக இந்தியா நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது கேலியானது. இலங்கை அணி அவுஸ்ரேலியாவுக்கு ருவென்ரி ருவென்ரி மற்றும் ஒருநாள் தொடருக்குச் சென்றிருந்த போது பேர்த் இல் வைத்து சுராஜ் ரந்தீவ் மிகச்சிறப்பாகப் பந்துவீசியதை ஞாபகமூட்ட விரும்புகிறேன். ஆகவே சுழற்பந்து வீச்சாளர்களால் பேர்த் இல் பந்துவீசவே முடியாது என்றுமில்லை.
மறுபுறத்தில் விராத் கோலிக்கு மூன்றாவது போட்டியில் வாய்ப்பு வழங்கி ஒரு நல்ல வேலையை இந்திய அணி நிர்வாகம் செய்திருந்தது. தன் மீதிருந்த விமர்சனங்களை இல்லாமல் செய்திருந்தார் விராத் கோலி.
மறுபுறத்தில் வி.வி.எஸ்.லக்ஸ்மனுக்குப் பதிலாக றோகித் சர்மாவிற்கு வாய்ப்பை வழங்கினால் றோகித் சர்மாவால் சிறப்பாகச் செயற்பட முடியுமா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
ஆனால் "வாய்ப்பே வழங்காமல் ஏன் றோகித் சர்மா மீது இவ்வாறு ஓர் முடிவு" என றோகித் சர்மாவின் இரசிகர்கள் கேட்பதையும் மறுக்க முடியாது.
வேகப்பந்து வீச்சில் ஷகீர் கானும், உமேஸ் யாதவ் உம் அவர்களது சிறப்பான பந்துவீச்சாளர்கள். இசாந்த் சர்மா இன்னும் தன்னை பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. 44 ரெஸ்ற் போட்டிகளை விளையாடிய ஒருவர் 37.19 என்ற பந்துவீச்சுச் சராசரியுடன் இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுள் ஒருவராக இருப்பது அவ்வளவு ஆரோக்கியமானதாகக் காணப்படவில்லை.
ஆனால் வருண் ஆரோண் அணிக்குள் வந்தால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சும் பலம்பெற வாய்ப்புக்கள் உண்டு.
மற்றும்படி, அஜின்கியா ரஹானே, றோகித் சர்மா, புஜாரா போன்ற அடுத்த தலைமுறை வீரர்களை ரெஸ்ற் அரங்கிற்குத் தயார்படுத்தி அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதைத் தவிர இந்திய அணிக்கு வேறு வாய்ப்புக்கள் கிடையாது. இவ்வாறு இளைஞர்கள் அணிக்குள் உள்வாங்கப்பட்டால் அணியின் களத்தடுப்பும் மேம்படும், அணிக்கு மேலதிக நன்மையாகவும் அது அமையும்.
இலங்கை அணியின் குழப்பங்கள் குறித்து முடியுமானால் இன்னுமொரு பதிவாக எழுதுகிறேன்.
Labels:
அவுஸ்ரேலியா,
இந்தியா,
கிறிக்கற்,
சச்சின்,
டோணி,
ரெஸ்ற்,
ரெஸ்ற் தொடர்
Saturday, December 31, 2011
2011ம் ஆண்டின் இறுதிப் புலம்பல்.
பதிவுலகிலிருந்து கிட்டத்தட்ட முழுமையாகவே விலகியிருந்தேன். நான் தவறவிடாமல் வாசிக்கும் பதிவுகளைக்கூட வாசிப்பதை அண்மைக்காலத்தில் தவறிவிட்டிருந்தேன்.
முன்பளவுக்கு வெட்டி இல்லை என்றபோதிலும், பதிவுகளை வாசிக்க முடியாதளவுக்கு வேலைப்பழுவுடன் இருக்கிறேனே என்ற கேள்வியை எனக்கு நானே அடிக்கடி கேட்டுப் பார்ப்பதுண்டு. நேரமில்லை என்பதை விட மனமில்லை என்பது தான் முக்கியமான காரணமாக அமைந்திருந்தது.
இந்த வருடத்தில் எழுதிய பதிவுகள் மிகச் சொற்பம், வாசித்தவையும் சொற்பம்.
இந்த வருடம் இன்றுடன் நிறைடைகிறது/முடிவடைகிறது.
இந்த 2011 என்ற முடிவடைந்தால் என்ன, ஏன் இந்தப் பெரும் ஆரவாரங்கள் என்று யோசித்துப் பார்த்தேன். 2011 என்பது வெறும் எண் தானே. 2011ம் ஆண்டு இரவு 11.59 இற்கு இருக்கும் சூழ்நிலைகள், வெறும் 1 ஒரு நிமிடத்தில் தலைகீழாக மாறி ஏதாவது நடக்கப் போகிறதா என்று கேள்வி எழுப்பிப் பார்த்தேன்.
இதில் இன்றா 2012ம் ஆண்டு பிறக்கிறது என்று வேறு குழம்பிப் போனேன். காலையில் எழுந்து பேஸ்புக் பக்கம் வந்து பார்த்தால், நிறையப் பேர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அலைபேசியில் பயன்படுத்திக் கொண்டிருந்ததால், பக்கத்தில் இருந்த அலுவலக/அறை சகோவிடம் இன்றா, நாளையா 2012 பிறக்கிறது என்று வேறு கேட்டுத் தொலைத்தேன்.
இந்த வருடம் தனிப்பட்டு மோசமான வருடங்களில் ஒன்றாக அமைந்தது. 2008 இற்குப் பின் மிக மோசமான வருடமாக அமைந்து போனது. வரும் போது தான் யோசித்துப் பார்த்தேன், 2008ம் ஆண்டு ஓரளவு பரவாயில்லாத ஆண்டாக அமைந்திருந்தாலும் கூட இந்தாண்டு ஓர் சிறந்த ஆண்டாக அமைந்திருக்கலாம். ம் ம்... அனுபவங்கள், பாடங்கள்... வேறு என்ன சொல்ல.
இந்த ஆண்டு கிழித்தது என்று ஒன்றும் கிடையாது என்று நினைக்கிறேன்.
வெற்றியில் இணைந்தது, கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடைந்திருக்கிறது, என்னால் முடிந்தளவு பணியாற்றியிருக்கிறேன்/பணியாற்ற முயற்சித்திருக்கிறேன். அந்த ரீதியில் இவ்வாண்டு புதிதான அனுபவம்.
வெற்றியின் காரணமாக பெற்ற நண்பர்கள், விசேடமானவர்கள் என்று ஒரு பக்கமாக நல்ல விடயங்களையும் மறுப்பதற்கில்லை.
ஆனால் நிறைய இழந்திருக்கிறேன், 3 வருடங்களுக்கு முன்னர் இருந்த எனக்கும், இன்றுள்ள எனக்குமிடையிலான வித்தியாசங்களை என்னால் உணரமுடிகிறது, கடந்த வருடத்தில் இருந்த எனக்கும் இப்போது இருக்கிற எனக்குமிடையிலான வித்தியாசங்களையும் உணரமுடிகிறது.
இன்னும் ஒரு மணித்தியாலத்தில் பிறக்கப் போகிற அல்லது பிறப்பதாக நாங்கள் எண்ணப் போகிற 2012ஆம் ஆண்டிலாவது ஏதாவது உருப்படியாக செய்ய முடியுமா என்று பார்ப்போம்..
அத்தோடு அதிகம் காயப்பட்ட ஆண்டாகவும் இந்த ஆண்டு மாறிப்போனது. சில விமர்சனங்களை அல்லது விஷங்களை என்னால் ஜீரணிக்க முடிவதில்லை. அதுவும் நாங்கள் எதிர்பார்க்காத, அதிகம் மதிப்பு வைத்திருக்கும் ஒருவர் விஷங்களை கக்கும் போது ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதுடன், நிறையக் காயங்களும் ஏற்படும்.
பேஸ்புக்கில் ஸ்ரேற்றஸ் போட்ட பின்னர், ஒவ்வொரு நாளும் பேஸ்புக்கிலும், ட்விற்றரிலும் புலம்புகிறேன், ஏன் இங்கு பதிவில் ஒருநாள் புலம்பக்கூடாது என்று யோசித்தேன்.
அதுதான் இந்தப் புலம்பல்.
இந்தப் பதிவை(?) எழுதும் போது பின்னால் 7ஆவது தடவையாக திரும்ப ஒலித்துக் கொண்டிருக்கிறது "ஆருயிரே மன்னிப்பாயா?"
ஹ்ம்ம்...
"இல்லாமலே வாழ்வது இன்பம்,
இருந்தும் இல்லை என்பது துன்பம்".
புதுவருடம், புத்தாண்டு என்று கணக்கெடுப்பவர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Labels:
அலட்டல்,
கடுப்பு,
புலம்பல்,
மனிதர்கள்,
மீள்பார்வை
Tuesday, November 1, 2011
பாகிஸ்தான் - சபிக்கப்பட்ட தேசமா?
முதலில், இது ஒரு கிறிக்கற் பதிவு. சீரியஸான பதிவேதும் கிடையாது.
ஸ்பொட் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகளுக்காக பாகிஸ்தானின் இரண்டு வீரர்களுக்கெதிராக இடம்பெற்றுவந்த குற்றவியல் விசாரணகளின் முக்கிய பகுதியாக இன்று அவற்றிற்குரிய தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ஏமாற்றுவதற்காக சதி செய்தமை, முறையற்ற விதத்தில் பணத்தைப் பெற்றுக்கொண்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இடம்பெற்றுவந்த விசாரணையில் சல்மான் பட் இற்கு இரண்டு குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும், மொகமட் ஆசிஃப் ஏமாற்றுவதற்காக சதி செய்தார் என்ற குற்றஞ்சாட்டில் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பணத்தைப் பெற்றுக்கொண்டமை தொடர்பாக 12 பேர் அடங்கி நீதிபதிகள் குழு ஒருமித்த முடிவுக்கு வரமுடியாமை காரணமாக அது தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே குறித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூவரும் குற்றவாளிகள் எனத் தீர்மானித்து சல்மான் பட், மொகமட் ஆசிஃப் மற்றும் மொகமட் ஆமிர் மூவருக்கும் சர்வதேச கிறிக்கற் சபை கிறிக்கற்றில் பங்குபற்றுவதற்காக தடையுத்தரவை வழங்கியிருந்தது.
இந்நிலையில், இவ்விசாரணைகள் எவ்வளவிற்கு முக்கியமானவை என்ற கேள்வி எழலாம்.
ஆனால், சர்வதேச கிறிக்கற் சபை நடத்திய விசாரணைகளின் பின்னர் போட்டித்தடைகள் மாத்திரமே வழங்கப்படலாம், ஆனால் இப்போது இடம்பெற்றுவரும் விசாரணைகள் குற்றவியல் விசாரணைகள் என்பதால் இவர்கள் இருவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்படவும் வாய்ப்புக்கள் உண்டு. சல்மான் பட் இற்கு அதிகபட்சமாக 7 வருட சிறைத்தண்டனையும், மொகமட் ஆசிஃப் இற்கு அதிகபட்சமாக 2 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட தற்போதைய நிலையில் வாய்ப்புக்கள் உண்டு.
என்னைப் பொறுத்தவரை இன்றைய நாள் மிக முக்கியமானது.
இரண்டு குற்றவாளிகள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்புப் பெற்றிருக்கிறார்கள். இவ்விசாரணைகளில் மொகமட் ஆமிர் மற்றும் மஷார் மஜீத் ஆகியோருக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை என்னால் இக்கணம் வரை கண்டுபிடிக்க முடியவில்லை. நிறைய நாட்களாக அவர்களிருவரும் ஏன் அழைக்கப்படவில்லை என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்துத் தோல்வி தான்.
நீங்கள் கிறிக்கற் வீரர்களாக இருக்கலாம், சினிமா நட்சத்திரங்களாக இருக்கலாம், பிரபலங்களாக இருக்கலாம், ஆனால் சட்டத்தின் முன்னால் அனைவரும் நிறுத்தப்பட வேண்டும், தண்டனைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆவல்.
தற்போது இவர்கள் இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்து, தலையிடிக்கு மருந்தைக் வழங்கியுள்ளது இலண்டனிலுள்ள நீதிமன்றம். உடனடிப் பிரச்சினை தீர்ந்திருக்கிறது, இனிமேல் தலையிடி வராது என நம்பிக்கொள்ள ஓர் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
வழங்கப்படவுள்ள தண்டனைகள் இனிவரும் காலங்களில் எந்தவொரு வீரரும் பிழையான நடத்தைகளில், சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் நடந்துகொள்ள முடியாத அளவுக்கு அமைய வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு, அத்தோடு ஏனைய வீரர்களுக்கு ஓர் எச்சரிக்கையையும், பயத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
ஆனால் ஏற்கனவே சொன்னபடி, தலையிடிக்கான மருந்து மாத்திரம் போதுமானதா என்பது தான் என் கேள்வி.
தலையிடி எதனால் வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியதும், அதை எவ்வாறு குணப்படுத்துவது என்பதுவும் தொக்கி நிற்கின்ற வினாக்கள்.
எதற்காக இந்த ஸ்பொட் ஃபிக்சிங், எதற்காக இந்த முறைகேடுகள், எவ்வாறு இவற்றைத் தடுப்பது என்பது குறித்து தீர்க்கமான நடவடிக்கைகளில் கிறிக்கற் சபைகள் ஈடுபடவேண்டிய காலகட்டம் இதுவென்பதை இவ்விசாரணைகள் மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றன.
மொகமட்; ஆமிர், மொகமட் ஆசிஃப் என்ற இரண்டு மாபெரும் திறமைசாலிகள் இன்று தங்களது திறமைகளை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை மொகமட் ஆமிர் மற்றும் மொகமட் ஆசிஃப் இருவரும் மாபெரும் ஜாம்பவான்களாக உருவாகக்கூடிய திறமைகளை, வாய்ப்புக்களைக் கொண்டிருந்தவர்கள். கண்டியில் வைத்து இலங்கை அணியை உருட்டி எடுத்தபோது யாரோ ஆசி;ஃப் என்று புதுப்பெடியன் என்று திரும்பிப் பார்க்கவைத்த ஆசிஃப் ஆக இருக்கலாம், தனது முதலாவது ரெஸ்ற் போட்டியின் முதலாவது ஓவரில் விக்கெட்டைக் கைப்பற்றி சர்வதேசக் கவனம் முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த ஆமிர் ஆகட்டும், இன்று கிறிக்கற்றில் இல்லை.
மொகமட் ஆமிர் சில வருடங்களின் பின் மீண்டும் கிறிக்கற் போட்டிகளில் பங்குபற்றலாம், ஆனால் முன்பளவு அவரால் பிரகாசிக்க முடியுமா என்பது கேள்விக்குரியது. ஆசிஃப் இன் எதிர்காலம் கிட்டடத்தட்ட நிறைவடைந்துவிட்டது.
இவர்கள் ஏன் இவ்வழியைத் தேர்வு செய்தார்கள் என்பதை ஆராய வேண்டிய பொறுப்பு நீதித்துறைக்கும், சர்வதேச கிறிக்கற் சபைக்கும் உண்டு.
தாய், தந்தையர், குடும்பச்சூழல் சிறப்பாக அமையாத, குழப்பங்களைக் கொண்ட சந்தர்ப்பங்களில் அக்குடும்பங்களில் வாழும் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்வது குறைவானது. அதுவே பொதுவான பிரச்சினையாக அமைந்திருந்தது பாகிஸ்தானில்.
பாகிஸ்தான் கிறிக்கற் சபை உலகின் மோசமான கிறிக்கற் சபையாக, ஊழல் மிக்கதொன்றாக விளங்கியது, முன்னாள் வீரர்கள் நேர்மைக்குப் பெயர் போனவர்களும் கிடையாது, கிறிக்கற் சபையிடம் பணமேதும் இல்லாத நிலையில் வீரர்கள் போதிய ஊதியத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கள் இல்லை. ஐ.பி.எல் பணம் இல்லை...
இப்படி ஏராளமான விடயங்கள் இவ்வீரர்களை தவறு செய்யத் தூண்டியிருக்கலாம். ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தவறு செய்யத் தொடங்கினால் வாழ்க்கை முழவதும் தவறு மாத்திரமே செய்துகொண்டிருக்க எங்களால் முடியும்.
இம்மூன்று வீரர்களும் ஒழுங்கா வீரர்களாக இருந்திருந்தால், இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய பிராந்திய அணிகளில் விளையாடி தேவையான பணத்தைப் பெற்றிருக்கலாம், இதோ இவ்வாண்டு ஆரம்பிக்கவுள்ள பிக்பாஷ் தொடரில் சிறந்த ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கலாம், ஆனால் இப்போது எதுவுமேயில்லாமல் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்கள் இவர்கள்.
தந்தைக்கு தீர்ப்பு வழங்க சிறிறு நேரத்திற்கு முன்னர் பிறந்த குழந்தை என்ன பாவம் செய்தது, சல்மான் பட்டை சிறைக்கு அனுப்பிய குழந்தை என்று பெயர் வாங்க அக்குழந்தை என்ன பாவம் செய்தது?
கிறிக்கற் என்பதையும் தாண்டி, வாழ்க்கை பற்றிய, வாழ்தல் பற்றிய ஏராளமான கேள்விகளை இவ்வழக்கு எழுப்பி நிற்கிறது என்பது மாத்திரம் யதார்த்தம்.
ஆனால் ஒரு விடயம், ஸ்பொட் ஃபிக்சிங் பாகிஸ்தானில் மாத்திரம் இடம்பெறுகிறது, இம்மூன்று வீரர்களும் மாத்திரம் தான் அதில் ஈடுபடுகிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்க நான் முட்டாளில்லை. காலம் பதில் சொல்லுமென்று காத்திருக்க முடியாது தான், ஆனால் பல நேரங்களில் காத்திருப்பு மாத்திரமே வாழ்க்கையாகிவிடுகிறது.
Labels:
cricket,
ஆசிஃவ்,
ஆட்ட நிர்ணயம்,
ஆமிர்,
கிறிக்கற்,
விளையாட்டு
Location:
Colombo, Sri Lanka
Tuesday, August 23, 2011
இந்தியாவின் தோல்வியும் தெரிவிக்கப்படும்/கற்பிக்கப்படும் காரணங்களும் கருத்துக்களும்
அண்மைக்கால ரெஸ்ற் வரலாற்றில் எதிர்பாராத முடிவு பெறப்பட்ட ரெஸ்ற் தொடராக மாறிப்போன இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட ரெஸ்ற் தொடர் இந்திய அணிக்கும், இந்தியக் கிறிக்கற் சபைக்கும் எதிர்கொள்ள முடியாத தலையிடிகளையும் வழங்கியிருக்கிறது.
முதல்நிலை ரெஸ்ற் அணியாக இங்கிலாந்திற்குச் சென்ற இந்திய அணி 2-0 அல்லது 3-1 அல்லது 3-0 அல்லது 4-0 என்ற கணக்கில் இத்தொடரைத் தோல்வியுற்றால் மாத்திரமே முதல்நிலையைத் தவறவிடும் என்ற நிலையில், இந்திய அணியின் முதலிடத்திற்கு பெரிதளவில் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படாது என்றே எண்ணப்பட்டது.
இங்கிலாந்தின் ஆடுகள நிலைமைகள், அதாவது இங்கிலாந்தில் காணப்படும் ஸ்விங் தன்மை இந்தியா போன்ற உபகண்ட நாடொன்றிற்கு வில்லனாக அமையும் என்ற பொதுவான கருத்து நிலவியிருந்தாலும், இந்திய அணி அண்மைக்காலத்தில் இங்கிலாந்தில் ஓரளவு பரவாயில்லாமல் செயற்பட்டிருந்தது.
இத்தொடருக்கு முன்னர் இடம்பெற்றிருந்த 15 தொடர்களில் 11 தொடர்களில் இங்கிலாந்து வெற்றிபெற்று, ஒரு தொடரைச் சமப்படுத்தியிருந்தாலும், 2000ம் ஆண்டிற்குப் பின்னர் இடம்பெற்றிருந்த 2 தொடர்களில் ஒன்றில் சமநிலை முடிவையும், ஒரு தொடரில் இந்திய அணியின் தொடர் வெற்றியும் இந்திய அணிக்கு மனரீதியான பலத்தை வழங்கியிருக்கும்.
குறிப்பாக 2007ம் ஆண்டுத் தொடரில் தொடர் வெற்றியைப் பெற்றுக்கொண்டமை இங்கிலாந்தில் வெற்றிகளைப் பெறமுடியாது என்றில்லை என்பதைப் புலப்படுத்தியது.
எனினும், 2007ம் ஆண்டில் 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்று, முதலாவது போட்டியில் தோற்கும் நிலையிலிருந்து பின்வரிசை வீரர்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அத்தோல்வியிலிருந்து மீட்டது வரை இந்திய அணிக்கு நிச்சயமாக சாதகமான காரணங்களாகக் கருதப்பட்டன.
எனினும், 2007ம் ஆண்டில் இருந்த இங்கிலாந்து அணிக்கும் இப்போதுள்ள இங்கிலாந்து அணிக்குமிடையில் பாரிய வித்தியாசம் இருப்பது மறுக்க முடியாதது.
2007ம் ஆண்டில் அவுஸ்ரேலியாவிடம் 5-0 என்ற கணக்கில் ஆஷஷ் தோல்வியைப் பெற்றுக்கொண்ட இங்கிலாந்து அணிக்கும், அவுஸ்ரேலியாவுக்குச் சென்று 3-1 என்ற கணக்கில் ஆஷஷ் தொடரை வென்று வந்த அணிக்குமிடையிலும் நிச்சயமாக பெரியளவிலான மாற்றங்கள் உள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த இங்கிலாந்து அணி மீது எனக்கு தனிப்பட்ட கடுப்பு இருந்தாலும் (அவுஸ்ரேலியாவை ஆஷஷில் தோற்கடித்த கடுப்பு), எப்போதுமே இந்த இங்கிலாந்து அணியின் இரசிகனாக இருந்திருக்கிறேன்.
2009ம் ஆண்டில் அன்டி பிளவர் இங்கிலாந்தின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக/அணிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுலாவில் முதல் ரெஸ்ற் போட்டியில் இங்கிலாந்து 51 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இனிங்ஸ் ஆல் தோல்வியடைந்த பின்னர் அதைப் பாடமாக எடுத்துக்கொண்டு இந்த இங்கிலாந்து அணி கடந்து வந்திருக்கும் பாதை அனைவருக்கும் பாடமானது.
குறிப்பாக "இடைக்காலப் பயிற்றுவிப்பாளர்கள்" அதிகரித்திருக்கும் இச்சூழ்நிலையில், ஒரு இடைக்காலப் பயிற்றுவிப்பாளரின் முதற் போட்டியிலேயே அவ்வணி மோசமான, ஏற்க முடியாத தோல்வியைப் பெற்றுக்கொண்டு, ஒரு பலமற்ற அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை 0-1 என்ற கணக்கில் தோற்று வர அந்தப் பயிற்றுவிப்பாளர் மீது இங்கிலாந்துக் கிறிக்கற் சபை வைத்த நம்பிக்கை முக்கியமானது. இந்த நிலையில், இந்திய அணியின் இந்த மோசமான தோல்விகளுக்குக் காரணமாகச் சொல்லப்படுபவவை பற்றியும், அவற்றில் காணப்படுகிற உண்மைகள், பிழையான தன்மைகள் பற்றியும் இப்பதிவு ஆராய முற்படுகிறது.
1. காரணம்: இந்திய வீரர்களின் technique போதியளவு இல்லை. நுட்ப ரீதியாக இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் சரியானவர்கள் கிடையாது.
காணப்படும் உண்மை: முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் இக்கருத்தில் ஓரளவு உண்மை உண்டு. இங்கிலாந்து போன்ற ஸ்விங் அதிகமாகக் காணப்படும் இடத்தில் நீங்கள் சிறந்த நுட்பத்தைக் கொண்டிருந்தாலே உங்களால் சிறப்பாக ஆடலாம். இந்தியாவில் நுட்ப ரீதியாக மிகச்சிறந்தவர்கள் என்று சொல்லுமளவிற்கு ராகுல் ட்ராவிட் மற்றும் சச்சின் ரென்டுல்கரே உண்டு. short பந்துகளுக்கு சில தருணங்களில் தனது இயலாமையை வெளிப்படுத்தினாலும், கௌதம் கம்பீரையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களைத் தவிர, வி.வி.எஸ் லக்ஸ்மன், டோணி, ரெய்னா போன்றவர்கள் ஸ்விங் பந்துகளுக்கு பலவீனமானவர்கள் என்ற கருத்துக் காணப்படுகிறது. விரேந்தர் செவாக் மீதும் இந்தக் கருத்துக் காணப்பட்டாலும், அவரது தனிப்பட்ட துடுப்பாட்டமுறையில் அவர் இவற்றைப் பற்றிக் கவனமெடுப்பதில்லை என்று பொதுவாகச் சொல்வார்கள்.
எனினும் ஆசியக் கண்டத்திற்கு வெளியே விரேந்தர் செவாக்கின் கடைசி 15 இனிங்ஸ்கள் ஏதோ ஒன்றை மறைமுகமாகச் சொல்கின்றன.
கடைசி 15 இனிங்ஸ்களில் செவாக்: 24, 34, 22, 48, 12, 0, 63, 25, 32, 13, 11, 0, 0, 8, 33.
சராசரி: 21.66.
எதிர்க்கருத்து: சரியான நுட்பமுறைகள் கொண்ட வீரர்கள் தான் இங்கிலாந்தில் சிறப்பாகச் செயற்பட முடியும் என்றில்லை. கடந்த முறை பங்களாதேஷ் இங்கிலாந்திற்கு விஜயம் செய்தபோது பங்களாதேஷின் தமிம் இக்பாலின் அதிரடிகள் அதை நிரூபித்திருந்தன. தவிர, இத்தொடருக்கு முன்னர் வி.வி.எஸ் லக்ஸ்மன் இங்கிலாந்தில் 7 போட்டிகளில் விளையாடி 44.88 என்ற சராசரியைக் கொண்டிருந்தார்.
அண்மைக்கால வீரர்களில் ஷிவ்நரின் சந்தர்போல், க்றேம் ஸ்மித், கங்குலி போன்ற வீரர்கள் இங்கிலாந்து மண்ணில் மிகச்சிறப்பாகச் செயற்பட்டு தங்களை நிரூபித்திருந்தார்கள்.
ஆகவே நுட்பரீதியிலான பிரச்சினைகள் முக்கியமான காரணியாக மாறியதாக ஏற்றுக்கொள்ள முடியுமா தெரியவில்லை.
2. காரணம்: இந்திய அணி போதியளவு தயார்ப்படுத்தல்களோடு செல்லவில்லை. போதியளவு பயிற்சிப் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை.
காணப்படும் உண்மை: இந்திய அணி ஒரே ஒரு பயிற்சிப்போட்டியில் மாத்திரமே விளையாடியிருந்தது. குறித்த போட்டியிலும் சிறப்பாக விளையாடியிருக்கவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்தின் களநிலைமைகள் தொடர்பான அறிவு அவர்களுக்கு போதியளவுக்குக் கிடைக்க வாய்ப்புக் குறைவாக இருந்தது. அத்தோடு சச்சின் ரென்டுல்கர் உட்பட சில வீரர்கள் போதியளவு போட்டிப் பயிற்சிகளைக் (match practice) கொண்டிருக்கவில்லை என்பதும் உண்மையானது.
எதிர்க்கருத்து: தயார்ப்படுத்தல் போதாது என்ற கருத்து ஏற்கப்படக்கூடியது என்ற போதிலும், சச்சின் ரென்டுல்கர் போன்ற நட்சத்திரங்கள் கூட சறுக்கியிருந்தமை கேள்விகளை எழுப்பியிருந்தது.
3. வீரர்கள் களைப்படைந்திருந்தனர்.
காணப்படும் உண்மை: மகேந்திரசிங் டோணி, சுரேஷ் ரெய்னா உட்பட சில வீரர்கள் தொடர்ச்சியாகப் போட்டிகளில் பங்குபற்றி வந்திருக்கிறார்கள். உலகக்கிண்ணம், ஐ.பி.எல், அதன்பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுலா எனத் தொடர்ச்சியான போட்டிகளில் பங்குபற்றிவந்த நிலையில், குறித்த வீரர்கள் உடல்ரீதியாக மாத்திரமன்றி, மனரீதியாகவும் களைப்படைந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
எதிர்க்கருத்து: ஆனால் ஐ.பி.எல் போட்டிகளுக்குப் பின்னர் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுலாவில் விரேந்தர் செவாக், கௌதம் கம்பீர், சச்சின் ரென்டுல்கர், ஷகீர் கான், ஶ்ரீசாந்த் ஆகியோர் இடம்பெற்றிருக்கவில்லை. அதன்காரணமாக களைப்படைதல் என்ற பேச்சு எந்தளவுக்கு எடுபடக்கூடியது என்பது கேள்விக்குரியது. வி.வி.எஸ்.லக்ஸ்மன் மற்றும் ராகுல் ட்ராவிட் ஆகியோர் ரெஸ்ற் போட்டிகளில் மாத்திரம் பங்கேற்கும் நிலையில், இவர்களும் களைப்படைதல் என்ற நிலைக்குள் உள்ளடக்கப்படக்கூடியவர்கள் அல்லர். அத்தோடு இசாந்த் சர்மாவும் உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்கேற்றிருக்கவில்லை.
4. காயங்கள் காரணமாக முக்கிய வீரர்களை இழந்தமை:
காணப்படும் உண்மை: ஷகீர் கான், விரேந்தர் செவாக் போன்றோரை இழந்திருந்தமை, கௌதம் கம்பீர் போட்டிகளில் ஏற்பட்ட காயம் காரணமாக தடுமாறியமை, பிரவீன் குமார் நான்காவது போட்டியில் காயம் காரணமாக பங்கேற்றிருக்காமை
எதிர்க்கருத்து: ஷகீர் கானின் இழப்பு முக்கியமானது என்ற போதிலும், மேற்கிந்தியத் தீவுகளில் ஷகீர் கானின்றி இந்திய அணி ஓரளவு சிறப்பாகவே பந்து வீசியிருந்தது. தவிர, விரேந்தர் செவாக்கின் ஆசியாவுக்கு வெளியேயான அண்மைக்கால துடுப்பாட்டத்தைப் பார்க்கும்போது அவரின் இழப்பு நிரப்பமுடியாத இழப்பா என்பது கேள்விக்குரியது.
பிரவீன் குமார் முதல் 3 போட்டிகளில் பங்கேற்றிருந்தார். ஆகவே அவரது காயம் காரணமாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதல்ல.
கௌதம் கம்பீர் காயம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், தன்னாலியன்றளவு அணிக்காக அர்ப்பணித்திருந்தார். ஆனால் கௌதம் கம்பீரின் உபாதைகள் இந்திய அணிக்குப் பாதிப்பாக அமைந்திருந்தமை உண்மையானது.
5. இந்திய அணித் தெரிவுக் குழப்பங்கள்:
காணப்படும் உண்மை: அணித்தெரிவில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது சிலரின் கருத்தாகும். குறிப்பாக சுரேஷ் ரெய்னாவின் தொடர்ச்சியான மோசமான பெறுபேறுகளுக்குப் பின்னரும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டமை, நான்காவது போட்டியில் மியாமியில் தனது விடுமுறையைக் கழி/ளித்திருக் கொண்டிருந்த ஆர்.பி.சிங்கை அழைத்து அவருக்கு வாய்ப்பை வழங்கியமை,
அண்மைக்காலமாக பந்துவீச்சில் சறுக்கிவரும் ஹர்பஜன் சிங் இற்கு இறுதிவரை வாய்ப்பு வழங்கப்பட்டமை ஆகியவை முக்கியமானவை.
இதில் ஆர்.பி.சிங்கின் தெரிவு மிகவும் மோசமான ஒன்று. அதற்கு விளக்கங்களோ அல்லது காரணங்களோ தெரிவிக்கப்பட முடியாதது.
ஹர்பஜன் சிங் இற் 400 ரெஸ்ற் விக்கெட்டுகள் அவரை அணியில் வைத்திருக்கின்றன. அஸ்வின் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டிய காலம் வந்தாயிற்று. அத்தோடு காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாகத செவாக், ஷகீர்கான் போன்றோரே அவசரப்படுத்தி அணியில் சேர்த்தமையும் குழப்பமாகவே அமைந்திருந்தது.
எதிர்க்கருத்து: ஒருவகையில் சுரேஷ் ரெய்னாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டிய கட்டாயம் உண்டு. குறிப்பாக தனது கிறிக்கற் வாழ்வில் தான் விளையாடிய "துடுப்பெடுத்தாட கஷ்டமான ஆடுகளங்கள்" என ராகுல் ட்ராவிட் குறிப்பிட்ட மேற்கிந்தியத் தீவுகள் ஆடுகளங்களில் சுரேஷ் ரெய்னா மிகச்சிறப்பாகச் செயற்பட்டிருந்தார். ஆகவே அவருக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டியது. ஏனைய வீரர்களும் தடுமாறிய நிலையில் சுரேஷ் ரெய்னா மாத்திரம் பலியாடாக மாற்றப்பட முடியாது.
ஹர்பஜன் சிங் இற்குப் பதிலாக அஷ்வின் அல்லது ஒஜாவை முயற்சித்திருக்கலாம் என்ற போதிலும், மிகப்பெரிய தொடரொன்றில் அவர்களுக்கு அது அதிக அழுத்தங்களை வழங்கியிருக்கும் என்றாலும் "மக்டவல்ஸ்" விளம்பரமொன்றில் டோணி சொல்வது போல வெற்றிகரமான அணித்தலைவராக இருக்க வேண்டுமானால் சில முடிவுகளை எடுத்துத்தான் ஆகவேண்டும்.
(அந்த விளம்பரத்திலும் ஹர்பஜனுக்குப் பதிலாக அனுபவம் குறைந்த ஒரு பந்துவீச்சாளர் முக்கியமான தருணத்துக்கு தெரிவுசெய்யப்பட்டமை பற்றியே பேசப்படுகிறது)
6. சச்சினின் 100 ஆவது சதம் பற்றிய அதிக கவனம் செலுத்தல் அணியைப் பாதித்தது:
காணப்படும் உண்மை: இத்தொடருக்கு இந்திய அணி செல்லும் போதே சச்சின் ரென்டுல்கரின் 100 ஆவது சதம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. ஆகவே குறித்த எதிர்பார்ப்புகளும், ஊடக அழுத்தங்களும் ஒட்டுமொத்த இந்திய அணியைப் பாதித்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.
உதாரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் சச்சினின் 50 ஆவது ரெஸ்ற் சதம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகக் காணப்பட்ட தருணத்தில் இந்திய அணி தென்னாபிரிக்காவிற்கு எதிராக முதலாவது ரெஸ்ற் போட்டியில் களமிறங்கியது. குறித்த போட்டியில் இந்திய அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.
எனினும் குறித்த போட்டியின் இரண்டாம் இனிங்ஸ் இல் சச்சின் ரென்டுல்கர் தனது 50 ஆவது ரெஸ்ற் சதத்தைப் பூர்த்தி செய்திருந்தார். அதன்பின்னர் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே கவனக்கலைப்பு என்பது காரணமாகக் குறிப்பிடக்கூடியது தான்.
எதிர்க்கருத்து: ஆனால் சர்வதேச வீரர்கள், அனுபவம் மிக்க சாதனையாளர்கள் என்ற ரீதியில் குறித்த அழுத்தங்கள் ஏதாவது காணப்படின் அவற்றைக் களைந்து ஆடுவதற்கு இந்திய நட்சத்திரங்களால் முடியாமல் போனது என்பது எந்தளவுக்கு சரியானது எனத் தெரியவில்லை.
முதல்நிலை ரெஸ்ற் அணியாக இங்கிலாந்திற்குச் சென்ற இந்திய அணி 2-0 அல்லது 3-1 அல்லது 3-0 அல்லது 4-0 என்ற கணக்கில் இத்தொடரைத் தோல்வியுற்றால் மாத்திரமே முதல்நிலையைத் தவறவிடும் என்ற நிலையில், இந்திய அணியின் முதலிடத்திற்கு பெரிதளவில் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படாது என்றே எண்ணப்பட்டது.
இங்கிலாந்தின் ஆடுகள நிலைமைகள், அதாவது இங்கிலாந்தில் காணப்படும் ஸ்விங் தன்மை இந்தியா போன்ற உபகண்ட நாடொன்றிற்கு வில்லனாக அமையும் என்ற பொதுவான கருத்து நிலவியிருந்தாலும், இந்திய அணி அண்மைக்காலத்தில் இங்கிலாந்தில் ஓரளவு பரவாயில்லாமல் செயற்பட்டிருந்தது.
இத்தொடருக்கு முன்னர் இடம்பெற்றிருந்த 15 தொடர்களில் 11 தொடர்களில் இங்கிலாந்து வெற்றிபெற்று, ஒரு தொடரைச் சமப்படுத்தியிருந்தாலும், 2000ம் ஆண்டிற்குப் பின்னர் இடம்பெற்றிருந்த 2 தொடர்களில் ஒன்றில் சமநிலை முடிவையும், ஒரு தொடரில் இந்திய அணியின் தொடர் வெற்றியும் இந்திய அணிக்கு மனரீதியான பலத்தை வழங்கியிருக்கும்.
குறிப்பாக 2007ம் ஆண்டுத் தொடரில் தொடர் வெற்றியைப் பெற்றுக்கொண்டமை இங்கிலாந்தில் வெற்றிகளைப் பெறமுடியாது என்றில்லை என்பதைப் புலப்படுத்தியது.
எனினும், 2007ம் ஆண்டில் 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்று, முதலாவது போட்டியில் தோற்கும் நிலையிலிருந்து பின்வரிசை வீரர்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அத்தோல்வியிலிருந்து மீட்டது வரை இந்திய அணிக்கு நிச்சயமாக சாதகமான காரணங்களாகக் கருதப்பட்டன.
எனினும், 2007ம் ஆண்டில் இருந்த இங்கிலாந்து அணிக்கும் இப்போதுள்ள இங்கிலாந்து அணிக்குமிடையில் பாரிய வித்தியாசம் இருப்பது மறுக்க முடியாதது.
2007ம் ஆண்டில் அவுஸ்ரேலியாவிடம் 5-0 என்ற கணக்கில் ஆஷஷ் தோல்வியைப் பெற்றுக்கொண்ட இங்கிலாந்து அணிக்கும், அவுஸ்ரேலியாவுக்குச் சென்று 3-1 என்ற கணக்கில் ஆஷஷ் தொடரை வென்று வந்த அணிக்குமிடையிலும் நிச்சயமாக பெரியளவிலான மாற்றங்கள் உள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த இங்கிலாந்து அணி மீது எனக்கு தனிப்பட்ட கடுப்பு இருந்தாலும் (அவுஸ்ரேலியாவை ஆஷஷில் தோற்கடித்த கடுப்பு), எப்போதுமே இந்த இங்கிலாந்து அணியின் இரசிகனாக இருந்திருக்கிறேன்.
2009ம் ஆண்டில் அன்டி பிளவர் இங்கிலாந்தின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக/அணிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுலாவில் முதல் ரெஸ்ற் போட்டியில் இங்கிலாந்து 51 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இனிங்ஸ் ஆல் தோல்வியடைந்த பின்னர் அதைப் பாடமாக எடுத்துக்கொண்டு இந்த இங்கிலாந்து அணி கடந்து வந்திருக்கும் பாதை அனைவருக்கும் பாடமானது.
குறிப்பாக "இடைக்காலப் பயிற்றுவிப்பாளர்கள்" அதிகரித்திருக்கும் இச்சூழ்நிலையில், ஒரு இடைக்காலப் பயிற்றுவிப்பாளரின் முதற் போட்டியிலேயே அவ்வணி மோசமான, ஏற்க முடியாத தோல்வியைப் பெற்றுக்கொண்டு, ஒரு பலமற்ற அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை 0-1 என்ற கணக்கில் தோற்று வர அந்தப் பயிற்றுவிப்பாளர் மீது இங்கிலாந்துக் கிறிக்கற் சபை வைத்த நம்பிக்கை முக்கியமானது. இந்த நிலையில், இந்திய அணியின் இந்த மோசமான தோல்விகளுக்குக் காரணமாகச் சொல்லப்படுபவவை பற்றியும், அவற்றில் காணப்படுகிற உண்மைகள், பிழையான தன்மைகள் பற்றியும் இப்பதிவு ஆராய முற்படுகிறது.
1. காரணம்: இந்திய வீரர்களின் technique போதியளவு இல்லை. நுட்ப ரீதியாக இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் சரியானவர்கள் கிடையாது.
காணப்படும் உண்மை: முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் இக்கருத்தில் ஓரளவு உண்மை உண்டு. இங்கிலாந்து போன்ற ஸ்விங் அதிகமாகக் காணப்படும் இடத்தில் நீங்கள் சிறந்த நுட்பத்தைக் கொண்டிருந்தாலே உங்களால் சிறப்பாக ஆடலாம். இந்தியாவில் நுட்ப ரீதியாக மிகச்சிறந்தவர்கள் என்று சொல்லுமளவிற்கு ராகுல் ட்ராவிட் மற்றும் சச்சின் ரென்டுல்கரே உண்டு. short பந்துகளுக்கு சில தருணங்களில் தனது இயலாமையை வெளிப்படுத்தினாலும், கௌதம் கம்பீரையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களைத் தவிர, வி.வி.எஸ் லக்ஸ்மன், டோணி, ரெய்னா போன்றவர்கள் ஸ்விங் பந்துகளுக்கு பலவீனமானவர்கள் என்ற கருத்துக் காணப்படுகிறது. விரேந்தர் செவாக் மீதும் இந்தக் கருத்துக் காணப்பட்டாலும், அவரது தனிப்பட்ட துடுப்பாட்டமுறையில் அவர் இவற்றைப் பற்றிக் கவனமெடுப்பதில்லை என்று பொதுவாகச் சொல்வார்கள்.
எனினும் ஆசியக் கண்டத்திற்கு வெளியே விரேந்தர் செவாக்கின் கடைசி 15 இனிங்ஸ்கள் ஏதோ ஒன்றை மறைமுகமாகச் சொல்கின்றன.
கடைசி 15 இனிங்ஸ்களில் செவாக்: 24, 34, 22, 48, 12, 0, 63, 25, 32, 13, 11, 0, 0, 8, 33.
சராசரி: 21.66.
எதிர்க்கருத்து: சரியான நுட்பமுறைகள் கொண்ட வீரர்கள் தான் இங்கிலாந்தில் சிறப்பாகச் செயற்பட முடியும் என்றில்லை. கடந்த முறை பங்களாதேஷ் இங்கிலாந்திற்கு விஜயம் செய்தபோது பங்களாதேஷின் தமிம் இக்பாலின் அதிரடிகள் அதை நிரூபித்திருந்தன. தவிர, இத்தொடருக்கு முன்னர் வி.வி.எஸ் லக்ஸ்மன் இங்கிலாந்தில் 7 போட்டிகளில் விளையாடி 44.88 என்ற சராசரியைக் கொண்டிருந்தார்.
அண்மைக்கால வீரர்களில் ஷிவ்நரின் சந்தர்போல், க்றேம் ஸ்மித், கங்குலி போன்ற வீரர்கள் இங்கிலாந்து மண்ணில் மிகச்சிறப்பாகச் செயற்பட்டு தங்களை நிரூபித்திருந்தார்கள்.
ஆகவே நுட்பரீதியிலான பிரச்சினைகள் முக்கியமான காரணியாக மாறியதாக ஏற்றுக்கொள்ள முடியுமா தெரியவில்லை.
2. காரணம்: இந்திய அணி போதியளவு தயார்ப்படுத்தல்களோடு செல்லவில்லை. போதியளவு பயிற்சிப் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை.
காணப்படும் உண்மை: இந்திய அணி ஒரே ஒரு பயிற்சிப்போட்டியில் மாத்திரமே விளையாடியிருந்தது. குறித்த போட்டியிலும் சிறப்பாக விளையாடியிருக்கவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்தின் களநிலைமைகள் தொடர்பான அறிவு அவர்களுக்கு போதியளவுக்குக் கிடைக்க வாய்ப்புக் குறைவாக இருந்தது. அத்தோடு சச்சின் ரென்டுல்கர் உட்பட சில வீரர்கள் போதியளவு போட்டிப் பயிற்சிகளைக் (match practice) கொண்டிருக்கவில்லை என்பதும் உண்மையானது.
எதிர்க்கருத்து: தயார்ப்படுத்தல் போதாது என்ற கருத்து ஏற்கப்படக்கூடியது என்ற போதிலும், சச்சின் ரென்டுல்கர் போன்ற நட்சத்திரங்கள் கூட சறுக்கியிருந்தமை கேள்விகளை எழுப்பியிருந்தது.
3. வீரர்கள் களைப்படைந்திருந்தனர்.
காணப்படும் உண்மை: மகேந்திரசிங் டோணி, சுரேஷ் ரெய்னா உட்பட சில வீரர்கள் தொடர்ச்சியாகப் போட்டிகளில் பங்குபற்றி வந்திருக்கிறார்கள். உலகக்கிண்ணம், ஐ.பி.எல், அதன்பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுலா எனத் தொடர்ச்சியான போட்டிகளில் பங்குபற்றிவந்த நிலையில், குறித்த வீரர்கள் உடல்ரீதியாக மாத்திரமன்றி, மனரீதியாகவும் களைப்படைந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
எதிர்க்கருத்து: ஆனால் ஐ.பி.எல் போட்டிகளுக்குப் பின்னர் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுலாவில் விரேந்தர் செவாக், கௌதம் கம்பீர், சச்சின் ரென்டுல்கர், ஷகீர் கான், ஶ்ரீசாந்த் ஆகியோர் இடம்பெற்றிருக்கவில்லை. அதன்காரணமாக களைப்படைதல் என்ற பேச்சு எந்தளவுக்கு எடுபடக்கூடியது என்பது கேள்விக்குரியது. வி.வி.எஸ்.லக்ஸ்மன் மற்றும் ராகுல் ட்ராவிட் ஆகியோர் ரெஸ்ற் போட்டிகளில் மாத்திரம் பங்கேற்கும் நிலையில், இவர்களும் களைப்படைதல் என்ற நிலைக்குள் உள்ளடக்கப்படக்கூடியவர்கள் அல்லர். அத்தோடு இசாந்த் சர்மாவும் உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்கேற்றிருக்கவில்லை.
4. காயங்கள் காரணமாக முக்கிய வீரர்களை இழந்தமை:
காணப்படும் உண்மை: ஷகீர் கான், விரேந்தர் செவாக் போன்றோரை இழந்திருந்தமை, கௌதம் கம்பீர் போட்டிகளில் ஏற்பட்ட காயம் காரணமாக தடுமாறியமை, பிரவீன் குமார் நான்காவது போட்டியில் காயம் காரணமாக பங்கேற்றிருக்காமை
எதிர்க்கருத்து: ஷகீர் கானின் இழப்பு முக்கியமானது என்ற போதிலும், மேற்கிந்தியத் தீவுகளில் ஷகீர் கானின்றி இந்திய அணி ஓரளவு சிறப்பாகவே பந்து வீசியிருந்தது. தவிர, விரேந்தர் செவாக்கின் ஆசியாவுக்கு வெளியேயான அண்மைக்கால துடுப்பாட்டத்தைப் பார்க்கும்போது அவரின் இழப்பு நிரப்பமுடியாத இழப்பா என்பது கேள்விக்குரியது.
பிரவீன் குமார் முதல் 3 போட்டிகளில் பங்கேற்றிருந்தார். ஆகவே அவரது காயம் காரணமாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதல்ல.
கௌதம் கம்பீர் காயம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், தன்னாலியன்றளவு அணிக்காக அர்ப்பணித்திருந்தார். ஆனால் கௌதம் கம்பீரின் உபாதைகள் இந்திய அணிக்குப் பாதிப்பாக அமைந்திருந்தமை உண்மையானது.
5. இந்திய அணித் தெரிவுக் குழப்பங்கள்:
காணப்படும் உண்மை: அணித்தெரிவில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது சிலரின் கருத்தாகும். குறிப்பாக சுரேஷ் ரெய்னாவின் தொடர்ச்சியான மோசமான பெறுபேறுகளுக்குப் பின்னரும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டமை, நான்காவது போட்டியில் மியாமியில் தனது விடுமுறையைக் கழி/ளித்திருக் கொண்டிருந்த ஆர்.பி.சிங்கை அழைத்து அவருக்கு வாய்ப்பை வழங்கியமை,
அண்மைக்காலமாக பந்துவீச்சில் சறுக்கிவரும் ஹர்பஜன் சிங் இற்கு இறுதிவரை வாய்ப்பு வழங்கப்பட்டமை ஆகியவை முக்கியமானவை.
இதில் ஆர்.பி.சிங்கின் தெரிவு மிகவும் மோசமான ஒன்று. அதற்கு விளக்கங்களோ அல்லது காரணங்களோ தெரிவிக்கப்பட முடியாதது.
ஹர்பஜன் சிங் இற் 400 ரெஸ்ற் விக்கெட்டுகள் அவரை அணியில் வைத்திருக்கின்றன. அஸ்வின் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டிய காலம் வந்தாயிற்று. அத்தோடு காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாகத செவாக், ஷகீர்கான் போன்றோரே அவசரப்படுத்தி அணியில் சேர்த்தமையும் குழப்பமாகவே அமைந்திருந்தது.
எதிர்க்கருத்து: ஒருவகையில் சுரேஷ் ரெய்னாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டிய கட்டாயம் உண்டு. குறிப்பாக தனது கிறிக்கற் வாழ்வில் தான் விளையாடிய "துடுப்பெடுத்தாட கஷ்டமான ஆடுகளங்கள்" என ராகுல் ட்ராவிட் குறிப்பிட்ட மேற்கிந்தியத் தீவுகள் ஆடுகளங்களில் சுரேஷ் ரெய்னா மிகச்சிறப்பாகச் செயற்பட்டிருந்தார். ஆகவே அவருக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டியது. ஏனைய வீரர்களும் தடுமாறிய நிலையில் சுரேஷ் ரெய்னா மாத்திரம் பலியாடாக மாற்றப்பட முடியாது.
ஹர்பஜன் சிங் இற்குப் பதிலாக அஷ்வின் அல்லது ஒஜாவை முயற்சித்திருக்கலாம் என்ற போதிலும், மிகப்பெரிய தொடரொன்றில் அவர்களுக்கு அது அதிக அழுத்தங்களை வழங்கியிருக்கும் என்றாலும் "மக்டவல்ஸ்" விளம்பரமொன்றில் டோணி சொல்வது போல வெற்றிகரமான அணித்தலைவராக இருக்க வேண்டுமானால் சில முடிவுகளை எடுத்துத்தான் ஆகவேண்டும்.
(அந்த விளம்பரத்திலும் ஹர்பஜனுக்குப் பதிலாக அனுபவம் குறைந்த ஒரு பந்துவீச்சாளர் முக்கியமான தருணத்துக்கு தெரிவுசெய்யப்பட்டமை பற்றியே பேசப்படுகிறது)
6. சச்சினின் 100 ஆவது சதம் பற்றிய அதிக கவனம் செலுத்தல் அணியைப் பாதித்தது:
காணப்படும் உண்மை: இத்தொடருக்கு இந்திய அணி செல்லும் போதே சச்சின் ரென்டுல்கரின் 100 ஆவது சதம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. ஆகவே குறித்த எதிர்பார்ப்புகளும், ஊடக அழுத்தங்களும் ஒட்டுமொத்த இந்திய அணியைப் பாதித்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.
உதாரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் சச்சினின் 50 ஆவது ரெஸ்ற் சதம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகக் காணப்பட்ட தருணத்தில் இந்திய அணி தென்னாபிரிக்காவிற்கு எதிராக முதலாவது ரெஸ்ற் போட்டியில் களமிறங்கியது. குறித்த போட்டியில் இந்திய அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.
எனினும் குறித்த போட்டியின் இரண்டாம் இனிங்ஸ் இல் சச்சின் ரென்டுல்கர் தனது 50 ஆவது ரெஸ்ற் சதத்தைப் பூர்த்தி செய்திருந்தார். அதன்பின்னர் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே கவனக்கலைப்பு என்பது காரணமாகக் குறிப்பிடக்கூடியது தான்.
எதிர்க்கருத்து: ஆனால் சர்வதேச வீரர்கள், அனுபவம் மிக்க சாதனையாளர்கள் என்ற ரீதியில் குறித்த அழுத்தங்கள் ஏதாவது காணப்படின் அவற்றைக் களைந்து ஆடுவதற்கு இந்திய நட்சத்திரங்களால் முடியாமல் போனது என்பது எந்தளவுக்கு சரியானது எனத் தெரியவில்லை.
Labels:
இங்கிலாந்து,
இந்தியா,
கிறிக்கற்,
மீள்பார்வை,
ரெஸ்ற் தொடர்
Friday, June 10, 2011
சனத்தின் தெரிவும், எனது கருத்துக்களும்.
இங்கிலாந்துக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் ருவென்ரி ருவென்ரி போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டதும் அதை எதிர்த்துத் தெரிவிக்கப்பட்ட இரு விடயங்கள் முக்கியமானவை.
முதலாவது சனத் ஜெயசூரியவின் உள்ளடக்கம். இரண்டாவது, உப அணித்தலைவராக திலின கண்டம்பியின் நியமனம்.
இதில் ஒவ்வொன்றும் மற்றையதற்கு சளைத்தளவுக்கு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கவில்லை.
சாதனை நாயகனாக சனத், அண்மைக்காலமாக இலங்கை இரசிகர்களின் எதிர்ப்புக்களை நிறையவே சம்பாதித்திருந்தார். அதுவும் மோசமான form காரணமாக தொடர்ந்து சறுக்கி வந்த நிலையில் அரசியலிலும் குதித்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியும், கிறிக்கற்றிலிருந்து ஓய்வு பெறாதது நிறையவே சந்தேகங்களை எழுப்பியிருந்தது. சிறிது காலம் அணியில் தேவையற்ற ஒருவராக இருந்த சனத், அவரது மாபெரும் சாதனைகளையும், திறமைகளையும் மக்கள் மறந்து அவரை முழுமையாக வெறுக்குமளவிற்கு அவரது இறுதிக்காலம் அமைந்திருந்தது.
சில ஜாம்பவான் வீரர்கள் இறுதிக்காலத்தில் போதியளவு பங்களிப்புகளை வழங்காமல் அணியில் தொங்கிக் கொண்டிருப்பதொன்றும் புதிதானதொன்றில்லை என்ற போதிலும், ஓர் அரசியல்வாதி அவ்வாறு தொங்கிக் கொண்டிருப்பது பெரியளவில் வரவேற்புகளை வழங்கியிருக்கவில்லை.
ஓர் ஆளுங்கட்சி அரசியல்வாதி form இன்றி அணியில் இடம்பெற முடியும் எனில் அதற்கு ஒரே ஒரு காரணம் மாத்திரமே காணப்பட முடியும் என்று சொல்லலாம். ஆகவே ஒரு சாதனையாளர், வெறுக்கப்படும் நபராக மாறினார்.
இந்த நிலையில் 09ம் திகதி அறிவிக்கப்பட்ட இங்கிலாந்துக்கான இலங்கை அணியில் சனத் ஜெயசூரிய இடம்பெற்றிருந்தது பெரியளவில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
குறிப்பாக இங்கிலாந்துக்கான இலங்கை ரெஸ்ற் அணி சர்ச்சைகளை ஏற்படுத்தியதோடு, அங்கு சென்று பெரிதளவில் சாதிக்காதது மாத்திரமன்றி, சாதனை நாயகன் முத்தையா முரளிதரன் "இலங்கை தனது கிறிக்கற் வாழ்வில் வெளிப்படுத்திய மிக மோசமான திறமை வெளிப்பாடு" என விளித்த கார்டிவ் ரெஸ்ற் தோல்வியை சந்தித்திருந்தது.
அடுத்த போட்டியிலும் ஆதிக்கம் செலுத்திப் பின்னர் குறித்த போட்டியை சமநிலை செய்திருந்தது. அதுவும் இரண்டாவது இனிங்ஸ் இல் டில்ஷான் துடுப்பெடுத்தாடுவது சந்தேகத்திற்குள்ளான நிலையில் சற்று பதற்றப்பட்டே போட்டியை சமநிலைப்படுத்தியிருந்தது.
ஆகவே முரளிதரனின் ஓய்வு, அதற்குப் பின்னர் லசித் மலிங்கவின் ரெஸ்ற் போட்டிகளிலிருந்தான அறிவிக்கப்படாத ஓய்வு ஆகியவற்றின் காரணமாக தடுமாறிவரும் இலங்கை அணி, இன்னொரு தடவை இன்னொரு பின்நோக்கிய படியொன்றை எடுத்து வைக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. சனத்தின் உள்ளடக்கத்தை எதிர்த்தவர்களில் சனத்தின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்ப்பவர்கள் பாதிப்பேரும், இலங்கை ரெஸ்ற் அணியின் தோல்விகளின் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி சனத் ஜெயசூரியவின் வருகையால் தடுமாறப் போகிறது என்ற கவலையுடைவர்கள் பாதிப்பேரும் அடங்குவர்.
முதற்பகுதியினரை விடுத்து, இரண்டாம் பகுதியினரைப் பற்றி மாத்திரமே கருத்திற்கொள்ள முடியும்.
என்னைப் பொறுத்தவரை சனத் ஜெயசூரியவிற்கு ஓர் இறுதி வாய்ப்பு வழங்கப்படுவதில் எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. இலங்கைக் கிறிக்கற் அணியின் வரலாற்று மாற்றிப் போட்ட, இலங்கைக் கிறிக்கற் அணி எதை வைத்து இவ்வளவு தூரம் வளர்ந்ததோ, உலக சாதனையாளன் முத்தையா முரளிதரன் தன் கிறிக்கற் வாழ்வின் மிகப்பெரிய சாதனை என்று தெரிவித்த அந்த 1996ம் ஆண்டு உலகக்கிண்ண வெற்றிக்கு மிக முக்கிய காரணியாக அமைந்த, குறித்த தொடரின் தொடர் நாயகன் விருதைப் பெற்றுக்கொண்ட ஒரு சாதனையாளனுக்கு இறுதியாக விடைபெறல் வாய்ப்பு வழங்கப்படுவது கட்டாயமானது என்பது என் கருத்து.
ஜெயசூரியவின் அரசியல், அவரது இறுதிக்கட்ட நகர்வுகள் என்பன ஒரு பக்கமிருக்க, அவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்க்கின், சனத் ஜெயசூரிய என்பவர் இலங்கைக் கிறிக்கற்றில் தோன்றிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். முத்தையா முரளிதரனுடம் சேர்ந்து, இலங்கை பெற்றெடுத்த தலைசிறந்த வீரராகக் கருதப்படக் கூடியவர் என்ற வகையில், அவருக்குரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.
நான் வாசித்தறிந்த சில தகவல்களின் அடிப்படையில், விடைபெறும் போட்டி ஒன்று வழங்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே சனத் ஜெயசூரியவிற்கு குறித்த வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், ஆகவே லோர்ட்ஸ் போட்டியோடு ஓய்வுபெறுவது என்பது கிட்டத்தட்ட சனத் ஜெயசூரியவிற்கு திணிப்பட்ட ஒரு முடிவாகவே அமைந்திருந்தது. அதாவது forced decision.
எனக்குத் தெரிந்தவரையில், 5 ஒருநாள் போட்டிகளையும் விளையாட சனத் ஜெயசூரிய விரும்பியிருப்பார், ஆனால் அவருக்கு ஒரு போட்டிக்கான வாய்ப்பு மாத்திரமே வழங்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.
இதில் எழுப்பப்படுகின்ற இன்னொரு வினா, விடைபெறல் போட்டி எனில் அதை இலங்கையில் வைத்து வழங்கியிருக்கலாமே, அதை ஏன் இங்கிலாந்தில் வைத்து வழங்க வேண்டும்.
குறிப்பாக சமிந்த வாஸிற்கு வழங்கப்பட்ட விடைபெறல் ரெஸ்ற் போட்டி இலங்கையிலேயே இடம்பெற்றது. ஆகவே எதற்காக இங்கிலாந்தில் வைத்து அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், அதுவும் உலகக்கிண்ணம் நிறைவடைந்த பின்.
ஆனால் சில யதார்த்தங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என நம்புகிறேன். இதுவரை இலங்கையின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் (டில்ஷான், தரங்க) சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி வந்தார்கள். சனத் ஜெயசூரியவை மத்தியவரிசையில் துடுப்பெடுத்தாட எடுத்த முயற்சி பெரிதளவில் வெற்றியைத் தராத நிலையில், சனத் ஜெயசூரிய இலங்கை அணியின் தெரிவுகளிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார்.
ஆனால் தற்போது உபுல் தரங்க தடைசெய்யப்பட்ட மருந்து ஒன்றை உட்கொண்டாரா என அறிய விசாரணைகள் நடத்தப்படவுள்ள நிலையில், ஆரம்பத்துடுப்பாட்ட இடம் காலியாகவுள்ள நிலையில், சாதனை வீரர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பது என் கருத்து.
இலங்கை அணி உலகக்கிண்ணத்திற்கு முன்னர் ஜெயசூரியவிற்கு விடைபெறல் போட்டியொன்றை வழங்க வாய்ப்பு இருந்திருக்கவில்லை, அவ்வேளையில் உலகக்கிண்ணத்திற்கான அணியைத் தெரிவுசெய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த வேளையில் சனத் ஜெயசூரியவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பின், அதற்கு இப்போதுள்ளதை விட அதிகமான எதிர்ப்புக்கள் கிடைத்திருக்கும்.
இலங்கையின் அடுத்த உள்நாட்டில் இடம்பெறும் தொடராக அவுஸ்ரேலிய அணிக்கெதிரான தொடர் இருக்கும் என நம்புகிறேன். அதுவரை காத்திருக்காமல் இப்போது வாய்ப்பு வழங்குவதற்கு ஓர் வாய்ப்பாக அமைந்ததோடு, சிலவேளைகளில் அந்தத் தொடர் ஆரம்பிக்கும்போது உபுல் தரங்க மீதான விசாரணைகள் நிறைவடைந்து அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால் அவர் தொடர்ந்து விளையாடுவதற்கும் வாய்ப்பாக அமையுமல்லவா?
ஆகவே என்னைப் பொறுத்தவரை சனத ஜெயசூரியவின் தெரிவு முழுமையாகச் சரியானது.
உலகில் தோன்றிய சிறந்த சகல துறை வீரர்களில் ஒருவருக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்கள் சனத்.
என்னை எரிச்சற்படுத்திய விடயம் திலின கண்டம்பியின் உப அணித்தலைவர் பதவி. எனக்குத் திலின கண்டம்பி மீது தனிப்பட்ட விருப்பமின்மைகள் எவையும் கிடையாது. உண்மையைச் சொல்லப் போனால் திலின கண்டம்பி அணிக்குள் இடம்பெற வேண்டும் என்று "முன்பு" கருதியவன் நான்.
அத்தோடு திலின கண்டம்பியின் அணித்தலைமைப் பெறுபேறுகள் மோசமானவையும் கிடையாது. என் ஞாபகங்கள் சரி எனில், தென்னாபிரிக்காவிற்கு சென்று தென்னாபிரிக்க A அணிக்கெதிராக சிறப்பாக பெறுபேறுகளை வெளிப்படுத்தில இலங்கை A அணியைத் திறம்பட வழிநடத்தியதோடு, குறித்த தொடரில் தனிப்பட்ட ரீதியிலும் கலக்கியிருந்தார் திலின கண்டம்பி.
ஆகவே திலின கண்டம்பியின் தலைமைத்துவப்பண்புகளும் அந்தளவுக்கு குறைசொல்லக்கூடியவன கிடையாது.
ஆனால் எனக்கிருக்கும் கேள்விகள் என்னவெனில், கடந்த உலகக்கிண்ணத்தின் போது திலின கண்டம்பிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இலங்கையில் உள்ள சிறந்த 15 கிறிக்கற் வீரர்களில் ஒருவராக திலின கண்டம்பி அப்போது இருந்திருக்கவில்லை. உலகக்கிண்ணத்தில் விளையாடிய இலங்கை அணியிலிருந்து ஓய்வுபெற்றது முத்தையா முரளிதரன் மாத்திரமே. முரளிதரனின் இடத்திற்கு சுராஜ் ரந்தீவ் சேர்க்கப்பட வேண்டும்.
அப்படியானால் ஒரு தொடருக்கு முன் தேவையற்ற வீரராக இருந்த ஒருவர், எவ்வாறு திடீரென உப அணித்தலைவர் பதவி வழங்கப்படுமளவிற்கு உயர்ந்தார். அதுவும் உள்ளூர் போட்டிகளில் போதியளவுக்கு பிரகாசிக்காத போது?
உப அணித்தலைவராக 5 போட்டிகளிலும் திலின கண்டம்பி விளையாடப் போகிறாரா? ஆகவே இலங்கை கிறிக்கற் அணியின் பதினொருவர் அணிக்குள் நிரந்தர இடம் பெறுமளவிற்குமளவிற்கு தன்னை நிரூபித்துவிட்டாரா கண்டம்பி?
கண்டம்பி விளையாடிய சில இனிங்ஸ்கள் அபாரமானவை. இந்தியாவுக்கெதிராக ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவுப் போட்டியொன்றில், இலங்கை அணி வெல்லவே வாய்ப்பில்லாத ஒரு போட்டியை வென்றுவிடுவோமோ என்று நம்புமளவிற்கு அபாரமாக ஆடியிருந்தார். குறித்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 93 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் என நினைக்கிறேன்.
ஒரு பக்கமான விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறத்தில் திலின கண்டம்பி ஆடிய அந்த ஆட்டம் மறக்க முடியாதது.
ஆனால் மன்னிக்கவும் திலின கண்டம்பி, உங்களை நீங்கள் முழுமையாக நிரூபிக்கவில்லை.
எங்கள் விமர்சனங்களுக்கு பதிலளிக்கக்கூடிய ஒரே வழி 6 போட்டிகள் கொண்ட தொடரில் ஓட்டங்களைக் குவிப்பது மாத்திரம் தான்.
ஓட்டங்களைக் குவித்தால் எங்களைப் போன்ற "குறை சொல்பவர்கள்" அனைவரும் வாய்மூடி மௌனிகளாகிவிடுவோம்.
நாங்கள் விரும்பும் ஒருவருக்காக எங்களை நாங்களே முட்டாளாக உணர்வதும் ஒரு சுகம் தான்.
குறிப்பு: இது நான் தற்போது பணிபுரியும் வெற்றி வானொலியில் இடம்பெறும் வாராந்த விளையாட்டு நிகழ்ச்சியொன்றிற்காக மூத்த பதிவரும், எங்கள் பணிப்பாளருமான லோஷன் அண்ணாவுடன், மூத்த விளையாட்டு விமர்சகர்/அறிவிப்பாளர் விமல் அண்ணாவுடன் கலந்துரையாடிய ஒரு தலைப்பு.
அதன் ஒலிபரப்பு இன்று (10.06-2011) இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கு ஒலிபரப்பாகும்.
இந்தப் பதிவில் நான் தெரிவித்த சில விடயங்களை மாத்திரம் சொல்லியிருக்கிறேன். லோஷன் அண்ணாவினுடையதும், விமல் அண்ணாவினதும் கருத்துக்கள் வேறானவை. அத்தோடு சனத்தின் தெரிவு பற்றிய ஒரு exclusive செய்தி விமல் அண்ணாவிடம் உண்டு. ;-)
வானொலியின் இணையச் சுட்டி: www.vettri.lk
வானொலியின் பேஸ்புக் பக்கம்: www.facebook.com/VettriFMOfficial
ட்விற்றர் சுட்டி: www.twitter.com/vettrifm
முதலாவது சனத் ஜெயசூரியவின் உள்ளடக்கம். இரண்டாவது, உப அணித்தலைவராக திலின கண்டம்பியின் நியமனம்.
இதில் ஒவ்வொன்றும் மற்றையதற்கு சளைத்தளவுக்கு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கவில்லை.
சாதனை நாயகனாக சனத், அண்மைக்காலமாக இலங்கை இரசிகர்களின் எதிர்ப்புக்களை நிறையவே சம்பாதித்திருந்தார். அதுவும் மோசமான form காரணமாக தொடர்ந்து சறுக்கி வந்த நிலையில் அரசியலிலும் குதித்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியும், கிறிக்கற்றிலிருந்து ஓய்வு பெறாதது நிறையவே சந்தேகங்களை எழுப்பியிருந்தது. சிறிது காலம் அணியில் தேவையற்ற ஒருவராக இருந்த சனத், அவரது மாபெரும் சாதனைகளையும், திறமைகளையும் மக்கள் மறந்து அவரை முழுமையாக வெறுக்குமளவிற்கு அவரது இறுதிக்காலம் அமைந்திருந்தது.
சில ஜாம்பவான் வீரர்கள் இறுதிக்காலத்தில் போதியளவு பங்களிப்புகளை வழங்காமல் அணியில் தொங்கிக் கொண்டிருப்பதொன்றும் புதிதானதொன்றில்லை என்ற போதிலும், ஓர் அரசியல்வாதி அவ்வாறு தொங்கிக் கொண்டிருப்பது பெரியளவில் வரவேற்புகளை வழங்கியிருக்கவில்லை.
ஓர் ஆளுங்கட்சி அரசியல்வாதி form இன்றி அணியில் இடம்பெற முடியும் எனில் அதற்கு ஒரே ஒரு காரணம் மாத்திரமே காணப்பட முடியும் என்று சொல்லலாம். ஆகவே ஒரு சாதனையாளர், வெறுக்கப்படும் நபராக மாறினார்.
இந்த நிலையில் 09ம் திகதி அறிவிக்கப்பட்ட இங்கிலாந்துக்கான இலங்கை அணியில் சனத் ஜெயசூரிய இடம்பெற்றிருந்தது பெரியளவில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
குறிப்பாக இங்கிலாந்துக்கான இலங்கை ரெஸ்ற் அணி சர்ச்சைகளை ஏற்படுத்தியதோடு, அங்கு சென்று பெரிதளவில் சாதிக்காதது மாத்திரமன்றி, சாதனை நாயகன் முத்தையா முரளிதரன் "இலங்கை தனது கிறிக்கற் வாழ்வில் வெளிப்படுத்திய மிக மோசமான திறமை வெளிப்பாடு" என விளித்த கார்டிவ் ரெஸ்ற் தோல்வியை சந்தித்திருந்தது.
அடுத்த போட்டியிலும் ஆதிக்கம் செலுத்திப் பின்னர் குறித்த போட்டியை சமநிலை செய்திருந்தது. அதுவும் இரண்டாவது இனிங்ஸ் இல் டில்ஷான் துடுப்பெடுத்தாடுவது சந்தேகத்திற்குள்ளான நிலையில் சற்று பதற்றப்பட்டே போட்டியை சமநிலைப்படுத்தியிருந்தது.
ஆகவே முரளிதரனின் ஓய்வு, அதற்குப் பின்னர் லசித் மலிங்கவின் ரெஸ்ற் போட்டிகளிலிருந்தான அறிவிக்கப்படாத ஓய்வு ஆகியவற்றின் காரணமாக தடுமாறிவரும் இலங்கை அணி, இன்னொரு தடவை இன்னொரு பின்நோக்கிய படியொன்றை எடுத்து வைக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. சனத்தின் உள்ளடக்கத்தை எதிர்த்தவர்களில் சனத்தின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்ப்பவர்கள் பாதிப்பேரும், இலங்கை ரெஸ்ற் அணியின் தோல்விகளின் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி சனத் ஜெயசூரியவின் வருகையால் தடுமாறப் போகிறது என்ற கவலையுடைவர்கள் பாதிப்பேரும் அடங்குவர்.
முதற்பகுதியினரை விடுத்து, இரண்டாம் பகுதியினரைப் பற்றி மாத்திரமே கருத்திற்கொள்ள முடியும்.
என்னைப் பொறுத்தவரை சனத் ஜெயசூரியவிற்கு ஓர் இறுதி வாய்ப்பு வழங்கப்படுவதில் எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. இலங்கைக் கிறிக்கற் அணியின் வரலாற்று மாற்றிப் போட்ட, இலங்கைக் கிறிக்கற் அணி எதை வைத்து இவ்வளவு தூரம் வளர்ந்ததோ, உலக சாதனையாளன் முத்தையா முரளிதரன் தன் கிறிக்கற் வாழ்வின் மிகப்பெரிய சாதனை என்று தெரிவித்த அந்த 1996ம் ஆண்டு உலகக்கிண்ண வெற்றிக்கு மிக முக்கிய காரணியாக அமைந்த, குறித்த தொடரின் தொடர் நாயகன் விருதைப் பெற்றுக்கொண்ட ஒரு சாதனையாளனுக்கு இறுதியாக விடைபெறல் வாய்ப்பு வழங்கப்படுவது கட்டாயமானது என்பது என் கருத்து.
ஜெயசூரியவின் அரசியல், அவரது இறுதிக்கட்ட நகர்வுகள் என்பன ஒரு பக்கமிருக்க, அவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்க்கின், சனத் ஜெயசூரிய என்பவர் இலங்கைக் கிறிக்கற்றில் தோன்றிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். முத்தையா முரளிதரனுடம் சேர்ந்து, இலங்கை பெற்றெடுத்த தலைசிறந்த வீரராகக் கருதப்படக் கூடியவர் என்ற வகையில், அவருக்குரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.
நான் வாசித்தறிந்த சில தகவல்களின் அடிப்படையில், விடைபெறும் போட்டி ஒன்று வழங்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே சனத் ஜெயசூரியவிற்கு குறித்த வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், ஆகவே லோர்ட்ஸ் போட்டியோடு ஓய்வுபெறுவது என்பது கிட்டத்தட்ட சனத் ஜெயசூரியவிற்கு திணிப்பட்ட ஒரு முடிவாகவே அமைந்திருந்தது. அதாவது forced decision.
எனக்குத் தெரிந்தவரையில், 5 ஒருநாள் போட்டிகளையும் விளையாட சனத் ஜெயசூரிய விரும்பியிருப்பார், ஆனால் அவருக்கு ஒரு போட்டிக்கான வாய்ப்பு மாத்திரமே வழங்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.
இதில் எழுப்பப்படுகின்ற இன்னொரு வினா, விடைபெறல் போட்டி எனில் அதை இலங்கையில் வைத்து வழங்கியிருக்கலாமே, அதை ஏன் இங்கிலாந்தில் வைத்து வழங்க வேண்டும்.
குறிப்பாக சமிந்த வாஸிற்கு வழங்கப்பட்ட விடைபெறல் ரெஸ்ற் போட்டி இலங்கையிலேயே இடம்பெற்றது. ஆகவே எதற்காக இங்கிலாந்தில் வைத்து அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், அதுவும் உலகக்கிண்ணம் நிறைவடைந்த பின்.
ஆனால் சில யதார்த்தங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என நம்புகிறேன். இதுவரை இலங்கையின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் (டில்ஷான், தரங்க) சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி வந்தார்கள். சனத் ஜெயசூரியவை மத்தியவரிசையில் துடுப்பெடுத்தாட எடுத்த முயற்சி பெரிதளவில் வெற்றியைத் தராத நிலையில், சனத் ஜெயசூரிய இலங்கை அணியின் தெரிவுகளிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார்.
ஆனால் தற்போது உபுல் தரங்க தடைசெய்யப்பட்ட மருந்து ஒன்றை உட்கொண்டாரா என அறிய விசாரணைகள் நடத்தப்படவுள்ள நிலையில், ஆரம்பத்துடுப்பாட்ட இடம் காலியாகவுள்ள நிலையில், சாதனை வீரர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பது என் கருத்து.
இலங்கை அணி உலகக்கிண்ணத்திற்கு முன்னர் ஜெயசூரியவிற்கு விடைபெறல் போட்டியொன்றை வழங்க வாய்ப்பு இருந்திருக்கவில்லை, அவ்வேளையில் உலகக்கிண்ணத்திற்கான அணியைத் தெரிவுசெய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த வேளையில் சனத் ஜெயசூரியவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பின், அதற்கு இப்போதுள்ளதை விட அதிகமான எதிர்ப்புக்கள் கிடைத்திருக்கும்.
இலங்கையின் அடுத்த உள்நாட்டில் இடம்பெறும் தொடராக அவுஸ்ரேலிய அணிக்கெதிரான தொடர் இருக்கும் என நம்புகிறேன். அதுவரை காத்திருக்காமல் இப்போது வாய்ப்பு வழங்குவதற்கு ஓர் வாய்ப்பாக அமைந்ததோடு, சிலவேளைகளில் அந்தத் தொடர் ஆரம்பிக்கும்போது உபுல் தரங்க மீதான விசாரணைகள் நிறைவடைந்து அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால் அவர் தொடர்ந்து விளையாடுவதற்கும் வாய்ப்பாக அமையுமல்லவா?
ஆகவே என்னைப் பொறுத்தவரை சனத ஜெயசூரியவின் தெரிவு முழுமையாகச் சரியானது.
உலகில் தோன்றிய சிறந்த சகல துறை வீரர்களில் ஒருவருக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்கள் சனத்.
என்னை எரிச்சற்படுத்திய விடயம் திலின கண்டம்பியின் உப அணித்தலைவர் பதவி. எனக்குத் திலின கண்டம்பி மீது தனிப்பட்ட விருப்பமின்மைகள் எவையும் கிடையாது. உண்மையைச் சொல்லப் போனால் திலின கண்டம்பி அணிக்குள் இடம்பெற வேண்டும் என்று "முன்பு" கருதியவன் நான்.
அத்தோடு திலின கண்டம்பியின் அணித்தலைமைப் பெறுபேறுகள் மோசமானவையும் கிடையாது. என் ஞாபகங்கள் சரி எனில், தென்னாபிரிக்காவிற்கு சென்று தென்னாபிரிக்க A அணிக்கெதிராக சிறப்பாக பெறுபேறுகளை வெளிப்படுத்தில இலங்கை A அணியைத் திறம்பட வழிநடத்தியதோடு, குறித்த தொடரில் தனிப்பட்ட ரீதியிலும் கலக்கியிருந்தார் திலின கண்டம்பி.
ஆகவே திலின கண்டம்பியின் தலைமைத்துவப்பண்புகளும் அந்தளவுக்கு குறைசொல்லக்கூடியவன கிடையாது.
ஆனால் எனக்கிருக்கும் கேள்விகள் என்னவெனில், கடந்த உலகக்கிண்ணத்தின் போது திலின கண்டம்பிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இலங்கையில் உள்ள சிறந்த 15 கிறிக்கற் வீரர்களில் ஒருவராக திலின கண்டம்பி அப்போது இருந்திருக்கவில்லை. உலகக்கிண்ணத்தில் விளையாடிய இலங்கை அணியிலிருந்து ஓய்வுபெற்றது முத்தையா முரளிதரன் மாத்திரமே. முரளிதரனின் இடத்திற்கு சுராஜ் ரந்தீவ் சேர்க்கப்பட வேண்டும்.
அப்படியானால் ஒரு தொடருக்கு முன் தேவையற்ற வீரராக இருந்த ஒருவர், எவ்வாறு திடீரென உப அணித்தலைவர் பதவி வழங்கப்படுமளவிற்கு உயர்ந்தார். அதுவும் உள்ளூர் போட்டிகளில் போதியளவுக்கு பிரகாசிக்காத போது?
உப அணித்தலைவராக 5 போட்டிகளிலும் திலின கண்டம்பி விளையாடப் போகிறாரா? ஆகவே இலங்கை கிறிக்கற் அணியின் பதினொருவர் அணிக்குள் நிரந்தர இடம் பெறுமளவிற்குமளவிற்கு தன்னை நிரூபித்துவிட்டாரா கண்டம்பி?
கண்டம்பி விளையாடிய சில இனிங்ஸ்கள் அபாரமானவை. இந்தியாவுக்கெதிராக ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவுப் போட்டியொன்றில், இலங்கை அணி வெல்லவே வாய்ப்பில்லாத ஒரு போட்டியை வென்றுவிடுவோமோ என்று நம்புமளவிற்கு அபாரமாக ஆடியிருந்தார். குறித்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 93 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் என நினைக்கிறேன்.
ஒரு பக்கமான விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறத்தில் திலின கண்டம்பி ஆடிய அந்த ஆட்டம் மறக்க முடியாதது.
ஆனால் மன்னிக்கவும் திலின கண்டம்பி, உங்களை நீங்கள் முழுமையாக நிரூபிக்கவில்லை.
எங்கள் விமர்சனங்களுக்கு பதிலளிக்கக்கூடிய ஒரே வழி 6 போட்டிகள் கொண்ட தொடரில் ஓட்டங்களைக் குவிப்பது மாத்திரம் தான்.
ஓட்டங்களைக் குவித்தால் எங்களைப் போன்ற "குறை சொல்பவர்கள்" அனைவரும் வாய்மூடி மௌனிகளாகிவிடுவோம்.
நாங்கள் விரும்பும் ஒருவருக்காக எங்களை நாங்களே முட்டாளாக உணர்வதும் ஒரு சுகம் தான்.
குறிப்பு: இது நான் தற்போது பணிபுரியும் வெற்றி வானொலியில் இடம்பெறும் வாராந்த விளையாட்டு நிகழ்ச்சியொன்றிற்காக மூத்த பதிவரும், எங்கள் பணிப்பாளருமான லோஷன் அண்ணாவுடன், மூத்த விளையாட்டு விமர்சகர்/அறிவிப்பாளர் விமல் அண்ணாவுடன் கலந்துரையாடிய ஒரு தலைப்பு.
அதன் ஒலிபரப்பு இன்று (10.06-2011) இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கு ஒலிபரப்பாகும்.
இந்தப் பதிவில் நான் தெரிவித்த சில விடயங்களை மாத்திரம் சொல்லியிருக்கிறேன். லோஷன் அண்ணாவினுடையதும், விமல் அண்ணாவினதும் கருத்துக்கள் வேறானவை. அத்தோடு சனத்தின் தெரிவு பற்றிய ஒரு exclusive செய்தி விமல் அண்ணாவிடம் உண்டு. ;-)
வானொலியின் இணையச் சுட்டி: www.vettri.lk
வானொலியின் பேஸ்புக் பக்கம்: www.facebook.com/VettriFMOfficial
ட்விற்றர் சுட்டி: www.twitter.com/vettrifm
Labels:
அணித்தெரிவு,
இலங்கை,
கிறிக்கற்,
சனத்,
விளையாட்டு
Subscribe to:
Posts (Atom)


